Tuesday, March 28, 2017

தமிழ் மணக்கும் !

வஞ்சியவள் கரங்களிலே வளைகுலுங்கும் 
கஞ்சமலர் முகத்தினிலே களைபெருகும் 
கொஞ்சிவரும் குரலிசையோ குளிரவைக்கும் 
நெஞ்சிலவள் நினைவுகளே நிதமினிக்கும்! 

திங்களொளி விழிகளிலே திகழ்ந்திருக்கும் 
மங்கையவள் நடையழகோ மனம்மயக்கும் 
பொங்கிவரும் சிரிப்பொலியோ பொலிவளிக்கும் 
தங்கமகள் அவள்மொழியில் தமிழ்மணக்கும்!

No comments:

Post a Comment