Tuesday, March 21, 2017

சிணுங்கிடும் பலவண்ணம் !!!


  அலைகடலென அவள்வருகையில்  பனித்துளிகளும்பூக்கும் 
***அமுதெனத்தமிழ் அவளிதழ்களில் தவழ்ந்திடமது தோற்கும் !
மலைமடிதனில் முகிலணைந்திட உளம்ரசித்ததைப் பார்க்கும் 
***மயங்கிடச்செயும் அழகினில்மனம் நினைவலைகளில் மூழ்கும் !
வலைவிரித்திட கயல்விழுந்திடும் விழிகளிலது தங்கும் 
***வயல்வெளியினில் வளிவருடிட சுகம்பெருகிடு மெங்கும் !
சிலைவடிவினள் மலர்முகத்தினில் குழிவிழுந்திடும் கன்னம் 
***சிரிக்கையில்வளைக் கரம்குலுங்கிடச் சிணுங்கிடும்பல வண்ணம் !

சியாமளா ராஜசேகர் 



No comments:

Post a Comment