நீலவானைக் கொசுவம் வைத்து
சேலையாய் உடுத்த வைப்பேன் ... !!
பால்நிலவை நெற்றிதன்னில்
திலகமாய் வைத்திடுவேன் .... !!
நட்சத்திர சரம் தொடுத்து
கூந்தலுக்கு சூட்டிடுவேன் ..!
நடைபயிலும் முகில்பிடித்து
விளையாடக் கொடுத்திடுவேன் ....!!
மின்னல்கீற்றை ஒடித்து வளைத்து
நகையாக்கி அணிவிப்பேன் ..!
கார்மேகம் தொட்டு உந்தன்
பட்டுக்கன்னம் பொட்டிடுவேன்....!!
வானவில்லில் ஊஞ்சல் கட்டி
அமரவைத்து ஆட்டிடுவேன் ...!
மத்தளமாய் இடிமுழங்க
மங்கலநாண் பூட்டிடுவேன்... !!
No comments:
Post a Comment