தோடிராகம் பாடியழைத்தேன்
ஓடோடி வாமுருகா ...!!
தோகைமயில் மீதிலேறி
பறந்தோடி வாமுருகா ...!!!
வெற்றிவேல் கையிலேந்தி
விரைந்தோடி வாமுருகா ...!!
சேவற்கொடி அசைந்தாட
சிரித்தோடி வாமுருகா ....!!!
தெய்வானை வள்ளியுடனே
இணைந்தோடி வாமுருகா ....!!
தந்தைதாய் தமையனுடனே
சேர்ந்தோடி வாமுருகா .....!!
முகமாறும் மலர்ந்திடவே
மகிழ்ந்தோடி வாமுருகா ...!!
பன்னிருகை அருள்வழங்க
களித்தோடி வாமுருகா ....!!!
தமிழாலுனைத் துதித்திடவே
மலர்ந்தோடி வாமுருகா ...!!
திருப்புகழைப் பாடுகின்றேன்
கேட்டோடி வாமுருகா ......!!!
திருவடியைத் தொழுதுநின்றேன்
தவழ்ந்தோடி வாமுருகா ....!!
சிலம்பொலியும் சிணுங்கிடவே
சிலிர்த்தோடி வாமுருகா .....!!!
வினையெல்லாம் தீர்த்திடவே
எழுந்தோடி வாமுருகா ...!!
குறைதீர்க்க குன்றிலிருந்து
குதித்தோடி வாமுருகா ....!!!
தஞ்சமென உனையடைந்தேன்
கனிந்தோடி வாமுருகா ...!!
பாவங்களைப் போக்கிடவே
பாய்ந்தோடி வாமுருகா .....!!!
No comments:
Post a Comment