கதிரவனின் சூடால் கருத்தாயோ நீயும்
புதிதாய் விரிந்திட்டப் பூவே ! - அதிசயமுன்
வண்ணம், கவலையேன் ? வாடாமல் புன்னகைத்துப்
பெண்கள் மனதிலிடங் கேள் !
சிந்திய வெண்பனியால் செக்கச் சிவந்தவளே
சுந்தரனும் உன்னழகில் சொக்கிடுவான் ! - சொந்தமெனக்
கொண்டிடவே ஆணும் கொடுத்திடுவா னுன்னையே
பெண்ணுக்குக் காதல் பரிசு .
மஞ்சள் மலர்களும் மையலில் வீழ்ந்ததோ
கொஞ்சி இரண்டுங் குலவுதோ - நெஞ்சினில்
பொங்கிடுங் காதலுடன் பூக்களும் புன்னகைக்க
தங்கிடு மின்பம் மணந்து .
முத்தங்கள் தந்தாரோ மோகத்தால் பூவுனக்கு
சித்திரங்கள் தீட்டியதார் செவ்விதழால் ? - நித்தமுமே
பூத்திடுவாய் வெண்பூவே போற்றிடுவேன் வெண்பாவால்
காத்திருப்பேன் நீமலர்வா யென்று !
உண்மையில் பேரெழிலி ஊதா நிறத்தழகி
கண்மணியெ னுள்ளங் கவர்ந்தாயே !- வண்ணமேவுன்
பட்டிதழில் கற்கள் பதித்தது யாரம்மா
பட்டென சொல்லி விடு
அதிகாலை நேரம் மலர்ந்திடும் மொட்டும்
மதிமயங்கச் செய்யும் மணத்தால் - அதிரூப
கன்னியர் கொண்டையில் கச்சிதமாய்ச் சூடிட
புன்னைகைசிந் தும்மல்லிப் பூ .
வானவில் பூவாகி வையகம் வந்ததோ
தேனமுது வண்டீர்க்குந் தீஞ்சுவையோ ? - மேனகையும்
பூவினைச் சூடிட பூலோகம் வந்திடுவாள்
தாவிக் குதித்து மகிழ்ந்து .
வியர்த்து வழிந்தாய் விரிகையில் மொட்டே
பயமோ வலியோ பகர்வாய் ! - மயங்கி
ரசித்தேன் மலர்களின் ராணியே ! என்னை
வசியப் படுத்தினாய் நீ .
விழிகள் விரிய வியந்தே ரசித்தேன்
வழியெங்கும் செம்பூவின் வண்ணம் - செழித்து
சிறந்தாய் கவின்மிகு செங்கொன்றைப் பூவே
பிறந்ததுற் சாக மெனக்கு .
புதிதாய் விரிந்திட்டப் பூவே ! - அதிசயமுன்
வண்ணம், கவலையேன் ? வாடாமல் புன்னகைத்துப்
பெண்கள் மனதிலிடங் கேள் !
சிந்திய வெண்பனியால் செக்கச் சிவந்தவளே
சுந்தரனும் உன்னழகில் சொக்கிடுவான் ! - சொந்தமெனக்
கொண்டிடவே ஆணும் கொடுத்திடுவா னுன்னையே
பெண்ணுக்குக் காதல் பரிசு .
மஞ்சள் மலர்களும் மையலில் வீழ்ந்ததோ
கொஞ்சி இரண்டுங் குலவுதோ - நெஞ்சினில்
பொங்கிடுங் காதலுடன் பூக்களும் புன்னகைக்க
தங்கிடு மின்பம் மணந்து .
முத்தங்கள் தந்தாரோ மோகத்தால் பூவுனக்கு
சித்திரங்கள் தீட்டியதார் செவ்விதழால் ? - நித்தமுமே
பூத்திடுவாய் வெண்பூவே போற்றிடுவேன் வெண்பாவால்
காத்திருப்பேன் நீமலர்வா யென்று !
உண்மையில் பேரெழிலி ஊதா நிறத்தழகி
கண்மணியெ னுள்ளங் கவர்ந்தாயே !- வண்ணமேவுன்
பட்டிதழில் கற்கள் பதித்தது யாரம்மா
பட்டென சொல்லி விடு
அதிகாலை நேரம் மலர்ந்திடும் மொட்டும்
மதிமயங்கச் செய்யும் மணத்தால் - அதிரூப
கன்னியர் கொண்டையில் கச்சிதமாய்ச் சூடிட
புன்னைகைசிந் தும்மல்லிப் பூ .
வானவில் பூவாகி வையகம் வந்ததோ
தேனமுது வண்டீர்க்குந் தீஞ்சுவையோ ? - மேனகையும்
பூவினைச் சூடிட பூலோகம் வந்திடுவாள்
தாவிக் குதித்து மகிழ்ந்து .
வியர்த்து வழிந்தாய் விரிகையில் மொட்டே
பயமோ வலியோ பகர்வாய் ! - மயங்கி
ரசித்தேன் மலர்களின் ராணியே ! என்னை
வசியப் படுத்தினாய் நீ .
விழிகள் விரிய வியந்தே ரசித்தேன்
வழியெங்கும் செம்பூவின் வண்ணம் - செழித்து
சிறந்தாய் கவின்மிகு செங்கொன்றைப் பூவே
பிறந்ததுற் சாக மெனக்கு .
No comments:
Post a Comment