Wednesday, February 18, 2015

பாரதியே...!!!




வானுமண்ணு முள்ளவரை வாழ்வாய்நீ வையகத்தில் 
மானுடம் பாடவந்த மாகவியே !- யானுனை 
வாழ்த்தி வணங்கிட வார்த்தை வராமலென் 
பாழ்மனந்த விப்பதைப்  பார் ! 

மெல்லத் தமிழினி மாயுமென்ற வேளையில் 
சொல்லி யுணர்த்திவளஞ் சேர்த்திட்டாய் - வெல்லக் 
கவிதைகளால் செந்தமிழ்க் காத்தாய், நிலைக்கும் 
புவியிலென் றும்நின் புகழ். 

ஈரமில்லா நெஞ்சில் இறைவனி ரானென்ற 
தாரக மந்திரம் தந்தவனே ! - பாரதியே 
பாட்டுக்கோர் பாவலனே பைந்தமிழால் போற்றிடுவேன் 
நாட்டிலுயர் நற்கவி நீ.

No comments:

Post a Comment