வானுமண்ணு முள்ளவரை வாழ்வாய்நீ வையகத்தில்
மானுடம் பாடவந்த மாகவியே !- யானுனை
வாழ்த்தி வணங்கிட வார்த்தை வராமலென்
பாழ்மனந்த விப்பதைப் பார் !
மெல்லத் தமிழினி மாயுமென்ற வேளையில்
சொல்லி யுணர்த்திவளஞ் சேர்த்திட்டாய் - வெல்லக்
கவிதைகளால் செந்தமிழ்க் காத்தாய், நிலைக்கும்
புவியிலென் றும்நின் புகழ்.
ஈரமில்லா நெஞ்சில் இறைவனி ரானென்ற
தாரக மந்திரம் தந்தவனே ! - பாரதியே
பாட்டுக்கோர் பாவலனே பைந்தமிழால் போற்றிடுவேன்
நாட்டிலுயர் நற்கவி நீ.
No comments:
Post a Comment