Tuesday, February 17, 2015

முருகா ....முருகா .... முருகா ....!!!




நீலச்சிகண்டியில் வரும் முருகனே ! 
கோலக் குறத்தி மணாளனே ! 
ஆலகண்டனின் மைந்தனே ! 
வேலனே ! கந்தனே ! குகனே ! 

அருட்கனி வேண்டி உலகைச் சுற்றி வந்தாய் ! 
அவ்வைத் தமிழில் உவகை பெற்று நின்றாய் ! 
அருணையில் அருணகிரிக்கு காட்சி தந்தாய் ! 
அலைமோதும் செந்தூரில் சூரவதம் செய்தாய் ! 

அடியவர் மனதில் அழகா நீ வசித்திடுவாய் ! 
அருணகிரி திருப்புகழில் அகமகிழ்ந்து ஆடிடுவாய் ! 
அநுபூதி பாடிவேண்ட குருவாய் வந்திடுவாய் ! 
அறுபடை வீட்டில் அனுதினம் அருள்பாலிப்பாய் ! 

அன்பால் உனைப் போற்றி துதிக்கின்றேன் ! 
என்பால் இறங்கி செவி மடுத்திடுவாய் ! 
அறியாது செய்த பிழை பொறுத்திடுவாய் ! 
சிறியேன் இனியுனைப் பிரியேன் காத்திடுவாய் ....!!

No comments:

Post a Comment