நீலச்சிகண்டியில் வரும் முருகனே !
கோலக் குறத்தி மணாளனே !
ஆலகண்டனின் மைந்தனே !
வேலனே ! கந்தனே ! குகனே !
அருட்கனி வேண்டி உலகைச் சுற்றி வந்தாய் !
அவ்வைத் தமிழில் உவகை பெற்று நின்றாய் !
அருணையில் அருணகிரிக்கு காட்சி தந்தாய் !
அலைமோதும் செந்தூரில் சூரவதம் செய்தாய் !
அடியவர் மனதில் அழகா நீ வசித்திடுவாய் !
அருணகிரி திருப்புகழில் அகமகிழ்ந்து ஆடிடுவாய் !
அநுபூதி பாடிவேண்ட குருவாய் வந்திடுவாய் !
அறுபடை வீட்டில் அனுதினம் அருள்பாலிப்பாய் !
அன்பால் உனைப் போற்றி துதிக்கின்றேன் !
என்பால் இறங்கி செவி மடுத்திடுவாய் !
அறியாது செய்த பிழை பொறுத்திடுவாய் !
சிறியேன் இனியுனைப் பிரியேன் காத்திடுவாய் ....!!
கோலக் குறத்தி மணாளனே !
ஆலகண்டனின் மைந்தனே !
வேலனே ! கந்தனே ! குகனே !
அருட்கனி வேண்டி உலகைச் சுற்றி வந்தாய் !
அவ்வைத் தமிழில் உவகை பெற்று நின்றாய் !
அருணையில் அருணகிரிக்கு காட்சி தந்தாய் !
அலைமோதும் செந்தூரில் சூரவதம் செய்தாய் !
அடியவர் மனதில் அழகா நீ வசித்திடுவாய் !
அருணகிரி திருப்புகழில் அகமகிழ்ந்து ஆடிடுவாய் !
அநுபூதி பாடிவேண்ட குருவாய் வந்திடுவாய் !
அறுபடை வீட்டில் அனுதினம் அருள்பாலிப்பாய் !
அன்பால் உனைப் போற்றி துதிக்கின்றேன் !
என்பால் இறங்கி செவி மடுத்திடுவாய் !
அறியாது செய்த பிழை பொறுத்திடுவாய் !
சிறியேன் இனியுனைப் பிரியேன் காத்திடுவாய் ....!!
No comments:
Post a Comment