Wednesday, February 18, 2015

செவ்வாய்க் கனிரசமே




செவ்வாய்க் கனிரசமே ! 
செண்பக மலர்மணமே ! 
செதுக்கிய சிலையெழிலே ! 
செம்பொன் மேனியளே ! 
செங்கரும்பின் இன்சுவையே ! 
செங்கமலப் புன்சிரிப்பே ! 
செஞ்சாந்துப் பொட்டழகே ! 
செந்தூரத் தேனிதழே ! 
செஞ்சுருட்டிப் பாவினமே ! 
செண்டாடும் ஓவியமே ! 
செருக்கில்லா காவியமே ! 
செம்மொழிக் கவிதையிலே 
செயப்படு பொருளானாய் ! 
செயலற்று நின்றுவிட்டேன் 
செயமாய் நீவந்திடுவாய் 
சென்மம் ஈடேற்றிடுவாய் !!

No comments:

Post a Comment