ஓங்கிய தென்னைகள் ஓடைக்குக் காவலோ
தேங்காத தண்ணீரும் தெள்ளமுதோ -வாங்கவென
கெஞ்சி யழைத்திடும் கொஞ்சு மழகிது
நெஞ்சிலூஞ்ச லாடும் வனப்பு .
தவழ்தென்றல் தென்னையைத் தாலாட்டக் காண்பீர்
சுவர்க்கமெனத் தோன்றிடுஞ் சூழல் உவப்பே
குலைதொங்குந் தென்னை குளிக்கும் நதியில்
கலையெழில் கொஞ்சிடக் காண் !
No comments:
Post a Comment