Tuesday, February 24, 2015

தென்னை மரமே ...!!!






ஓங்கிய தென்னைகள் ஓடைக்குக் காவலோ
தேங்காத தண்ணீரும் தெள்ளமுதோ -வாங்கவென
கெஞ்சி யழைத்திடும் கொஞ்சு மழகிது 
நெஞ்சிலூஞ்ச லாடும் வனப்பு .

தவழ்தென்றல் தென்னையைத் தாலாட்டக் காண்பீர்
சுவர்க்கமெனத் தோன்றிடுஞ் சூழல் உவப்பே
குலைதொங்குந் தென்னை குளிக்கும் நதியில்
கலையெழில் கொஞ்சிடக் காண் !

No comments:

Post a Comment