Wednesday, February 18, 2015

தாவணிக் குறும்பு



முறுக்குமீச வச்சமச்சான் 
முன்னால்நடந்து போகயிலே 
மஞ்சத்தண்ணி மேலூத்தி 
முத்துப்போல சிரிக்கவேணும் ! 

கம்மாக் கரையோரம் 
கட்டழகன் குளிக்கயிலே 
கல்லெறிந்து விட்டோடி 
கல்தூண்பின் ஒளியவேணும் ! 

களச்சியவன் தூங்கயிலே 
கைத்துண்டு முனைத்திருகி 
காதுக்குள்ளே விட்டுவிட்டு 
கடுப்பேத்திப் பாக்கவேணும் ! 

சகாவோடு இருக்கயிலே 
செல்லப்பேரக் கூப்பிட்டு 
சங்கடத்தால் நெளியக்கண்டு 
சந்தோசத்தில் குதிக்கவேணும் ! 

சாளரத்தின் கதவுதிறந்து 
சாடையாலே முத்தமிட்டு 
முறைத்துஅவன் முணுமுணுக்க 
முந்தானையால்முகம் மறைக்கவேணும் ! 

பாராமுகமாய்ப் போனாலும் 
பக்கம்போய் சீண்டிவிட்டு 
பொய்க்கோபம் அவனுள்கண்டு 
பயந்தாற்போல் ஓடவேணும் ! 

பரிசம்போட வரும்போது 
பாயசத்தில் உப்புசேர்த்து 
பவ்யமாய்ப் பரிமாறி -அவன் 
பருகுமழகை ரசிக்கவேணும் ....!!!

No comments:

Post a Comment