Thursday, May 3, 2018

வியப்பினிலாழும் ....!!!


நீலக் கடலினிலே நீந்திக் களிப்புடன்
ஓலமிட்டுத் துள்ளியாடி உற்சாகம் பொங்க
விரைந்துவரும் சிற்றலைகள் வெண்நுரைக ளாகக்
கரையினை முத்தமிட்டுக் காதலுடன் செல்ல
விரிந்தவான் தானும் வியப்பினி லாழும்
கரிக்கும் கடலினைக் கண்டு.
( பஃறொடை வெண்பா)

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment