காவடிச் சிந்து
வெண்பனி மூடிய காலை - ஒளி
மெல்லநி றைந்திடும் சோலை - அங்கு
மிகவழகுறு நறுமுகையினை
வளிவருடிட மலரிதழதும்
விரியும் - தேன் - சொரியும் !!
தண்டலை யில்குயில் கூவும் - அந்தச்
சத்தத்தில் உள்ளமும் தாவும் - அங்குச்
சலசலவென மரவிலைகளில்
எழுமொலியினில் இளமனமதன்
தனிமை - சுகம் - இனிமை !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment