Tuesday, May 8, 2018

காவடிச் சிந்து

வெண்பனி மூடிய காலை - ஒளி 
மெல்லநி றைந்திடும் சோலை - அங்கு 
மிகவழகுறு நறுமுகையினை 
வளிவருடிட மலரிதழதும் 
விரியும் - தேன் - சொரியும் !! 

தண்டலை யில்குயில் கூவும் - அந்தச் 
சத்தத்தில் உள்ளமும் தாவும் - அங்குச் 
சலசலவென மரவிலைகளில் 
எழுமொலியினில் இளமனமதன் 
தனிமை - சுகம் - இனிமை !! 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment