தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தீமென ஆடும்
***தீந்தமிழினில் வான்முகிலொடு தேன்பாசுரம் பாடும் !
பூம்பொழிலினில் மான்விழியொடு சாய்ந்தாடிடும் போது
***பூந்தளிர்விரல் தீண்டலில்முகம் மூன்றாம்பிறை யாகும் !
பாம்பெனநெளி கூந்தலில்மணம் தேன்பூவென வீசும்
***பாங்கொடுமர ஊஞ்சலிலவள் சேர்ந்தாடிடும் நேசம் !
சோம்பலிலவள் ஐம்புலன்களும் வேண்டாமென நாணும்
***தோன்றியநிசி நாண்மதியொடு தூங்காநிலை தானே !
(கூவிளங்கனி கூவிளங்கனி தேமாங்கனி தேமா )
No comments:
Post a Comment