Tuesday, May 8, 2018

சுரமேழில் மீட்டும் சுகம் ...!!!

விரல்க ளசைந்திட வீணையும் பேசும் 
குரலி லினிய குயிலிசைக் கேட்கும் 
வரமாய்க் கவிதை வனப்பினைக் கூட்டும் 
மரத்த விதயம் மகிழ்வில் நனைய 
இரவில் வருடு மினிய வளியாய் 
சுரமேழில் மீட்டும் சுகம். 

( பஃறொடை வெண்பா) 

No comments:

Post a Comment