Tuesday, May 8, 2018

அப்பா விழிகள் திறப்பாயா ??



வாழ்த்து சொல்லி அனுப்பிவைத்தாய் 
***வருமுன் எங்கே சென்றுவிட்டாய் ? 
ஏழ்மை யறிந்தும் நீட்யெழுத 
***ஏன்தான் ஆசைப் பட்டேனோ? 
சூழ்ந்து வந்த சோதனைகள் 
***துரத்தி யுன்னைக் கொன்றனவோ ? 
ஆழ்ந்த துயரில் துடிக்கின்றேன் 
***அப்பா விழிகள் திறப்பாயா ??

No comments:

Post a Comment