Tuesday, May 8, 2018

நீலக் கடலினிலே ....!!!


நீலக் கடலினிலே நீந்திக் களிப்புடன் 
ஓலமிட்டுத் துள்ளியாடி உற்சாகம் பொங்க 
விரைந்துவரும் சிற்றலைகள் வெண்நுரைக ளாகக் 
கரையினை முத்தமிட்டுக் காதலுடன் செல்ல 
விரிந்தவான் தானும் வியப்பினி லாழும் 
கரிக்கும் கடலினைக் கண்டு. 
( பஃறொடை வெண்பா) 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment