Monday, May 28, 2018

வான வீதியில் ...!!!



வான வீதியில் மேக ஊர்வலம் 
***வனப்பில் விழிகள் விரிந்திடும் ! 
வான வில்லதும் வண்ணக் குடையென 
***வடிவு காட்டிச் சிரித்திடும் ! 
வானம் பாடியாய்க் கானம் பாடியே 
***மழையும் நிலத்தில் பொழிந்திடும் ! 
வானத் துளிகளின் முத்தம் பெற்றதும் 
***மண்ணும் நாணிச் சிலிர்த்திடும் !! 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment