Monday, October 9, 2017

அன்பு !


அன்பால் மனத்தை  நிரப்பிவிட்டால் 
      அமைதி என்றும் குடியிருக்கும் !
அன்பே மனிதம் மலர்விக்கும் 
      அகத்தை மிகவும் அழகாக்கும் !
அன்பால் பகையும் உறவாகும் 
     அதுவே பித்தம் தெளிவாக்கும் !
அன்பே இறைவன் அருட்கொடையாம் 
     அறிந்தால் வாழ்வும் வரமாகும் !

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment