Thursday, October 5, 2017

கண்குளிர்ந்தேன் கண்ணனைக் கண்டு ....!!!


மண்ணையுண்ட மாயன் மறைந்துகொள்ள வென்மனம்
புண்ணான தென்றாலும் பொன்னடி யோசையிலே 
கண்குளிர்ந்தேன் கள்வனைக் கண்டு . 

உண்ணாமல் காத்திருந்தேன் ஊர்சுற்றி வந்தானோ 
வண்ணமலர் சூடியவன் வாசத்தில் பூத்தேன்யான் 
கண்ணாரக் கண்ணனைக் கண்டு.

திண்டாட வைப்பினும் செல்லக் குறும்புகளும் 
எண்ணத்தி லென்றும் இனித்திருக்கும் சிங்காரக்
கண்ணனின் பால்முகங் கண்டு.

( வெள்ளொத் தாழிசை )

No comments:

Post a Comment