வெளிவிருத்தம்
*********************
முத்தா யொளிர்கின்ற முத்தமிழ் காப்பவளே - தமிழன்னாய் !
மொத்த மொழிகளிலும் மூத்தவள் நீதானே - தமிழன்னாய் !
நித்தம் துதித்திடுவேன் நின்புகழ் பாடிடுவேன் - தமிழன்னாய் !
சித்தந் தெளிவாக்கிச் சீர்பெறச் செய்திடுவாய் - தமிழன்னாய் !
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment