காவியாய் விரிந்த வானில்
***கதிரவன் உதிக்கும் கோலம்
ஓவியம் தீட்டி னாற்போல்
***ஊர்ந்திடும் மேகக் கூட்டம்
தூவிடும் ஒளியும் பட்டுச்
***சுந்தர புவனம் பூக்கும் !
வாவியில் மலர்க ளாடும்
***வனப்பிலே உள்ளந் துள்ளும் !
கூம்பிய இதழ்கள் மெல்ல
***கோலமாய் விரிந்த தாலே
காம்புடன் நிற்கும் பூவும்
***களிநடம் புரியும் நீரில் !
பூம்புனல் பார்க்கும் வேளை
***பொங்கிடும் இதயம் தன்னால் !
சோம்பலும் மறைந்தே போகும்
***சூரிய உதயத் தாலே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment