Thursday, October 19, 2017

காத்திருப்பேன் உனக்காக ....!!!



சில்லென்ற காற்றினிலே கலந்த வாசம் 
    சிலிர்த்துவிட்டேன் உணர்வுகளில்  உன்றன் நேசம் !
நில்லாமல் அலைபாயும் நெஞ்சின் ஏக்கம் 
     நித்திரையைக் கலைத்ததடா நினைவின் தாக்கம் !
நல்லிரவும் சுட்டெரிக்கும் கதையைக் கேட்டால் 
    நதியலைக்கும் அழுகைவந்து கரையை முட்டும் !
சொல்லெடுத்துப்  பாடிடுவாய் தணியும் வேகம் 
     தொலைவினில்நீ இருந்தாலும் தீரும் சோகம் ....!!!

இளங்காற்றைத் தூதாக அனுப்பி விட்டே 
     இமைக்கதவை மூடாமல் காத்துக் கிடப்பேன் !
அளப்பரிய என்காதல்  நெஞ்சைச் சொல்லும் 
    அதுகேட்டால் கல்மனமும் கரையக் காண்பாய் !
உளங்குளிர பதிலைநீ அனுப்பி வைத்தே  
      உடைந்தமனம் அமைதியுற வகையும் செய்வாய் !
குளமான விழிகளிலே அன்பைத் தேக்கிக் 
      குடியிருக்க வரும்நாளைப் பார்ப்பேன் எண்ணி !!!
      
      
    

No comments:

Post a Comment