Saturday, October 21, 2017

செந்தில் வேலவா ....!!! ( நேரிசை ஆசிரியப்பா )


செந்தூர்க் கடலின் சிற்றலை கூடக் 
கந்தன் புகழைக் கனிவுடன் பாடும் !
சேவற் கொடியும் சீர்மிகு வேலும் 
காவ லிருக்கும்; கடும்பகை வெல்லும் !
பாடி யழைத்தால் பரிவுடன் 
தேடி வருவான் செந்தில் நாதனே ...!!!

No comments:

Post a Comment