Thursday, October 19, 2017

கவிபிறக்கும் நன்றே ....!!!


நீலவண்ண ஆடைகட்டி விரிந்த வானில் 
     நீந்திவரும் வெண்பஞ்சு முகிலின் கூட்டம் !
ஓலமிடும் வாரிதியின் அலைகள் துள்ளி 
     ஓயாமல் விண்பார்க்கத் துடிக்கும் நாட்டம் !
கோலமுடன் கரையெங்கும் பசுமை பூக்கக் 
    கொஞ்சிவரும் தென்றலுடன் கிளையின் ஆட்டம் ! 
காலமகள் போடுகின்ற இயற்கைக் கோலம்  
     கண்டவுடன் கவியொன்று பிறக்கும் நன்றே !

சியாமளா ராஜசேகர் 
      

No comments:

Post a Comment