நீலவண்ண ஆடைகட்டி விரிந்த வானில்
நீந்திவரும் வெண்பஞ்சு முகிலின் கூட்டம் !
ஓலமிடும் வாரிதியின் அலைகள் துள்ளி
ஓயாமல் விண்பார்க்கத் துடிக்கும் நாட்டம் !
கோலமுடன் கரையெங்கும் பசுமை பூக்கக்
கொஞ்சிவரும் தென்றலுடன் கிளையின் ஆட்டம் !
காலமகள் போடுகின்ற இயற்கைக் கோலம்
கண்டவுடன் கவியொன்று பிறக்கும் நன்றே !
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment