Thursday, June 8, 2017

சாயிநாமம் சொல்லிப்பார் ....!!!




சாயிநாமம் சொல்லிப்பார்
சங்கடங்கள் விலகிடும் - மன
சஞ்சலங்கள் நீங்கிடும் - வரும்
சரிவுகளும் நிமிர்ந்திடும்
சாந்தமுடன் அவர்பார்வையில்
சகலயோகம் கூடிடும்!
தாயைப்போல பரிவுடனே
தாங்கிநம்மைக் காப்பவர் - பசி
தாகத்தையும் தீர்ப்பவர் - தன
தானியங்கள் அருள்பவர்
தாரணியில் கண்கண்ட
தயைமிக்க குருயிவர்!
கையைத்தட்டிப் பாடினால்
கவலையெல்லாம் போய்விடும் - நம்
கர்மவினை கரைந்திடும் - பட்ட
கண்ணேறும் கழிந்திடும்
கண்மலர்ந்து வரம்கொடுக்கும்
கடவுளைநாம் வணங்குவோம்!
வாயைத்திறந்து உச்சரிக்க
வாட்டுந்துயர் விலகிடும் - நம்
வாழ்வில்வளம் பெருகிடும் - நல்
வாய்ப்புகளும் கிடைத்திடும்
வாஞ்சையுடன் தாள்பணிய
வல்வினைகள் தொலைந்திடும் !
நாயகனாய்ப் பெரம்பூரில்
நாடிவந்து அருள்பவர் - அவர்
நன்மைவாரித் தருபவர் - தன்னை
நம்பியோரை அணைப்பவர்
நாவினிக்க அவர்புகழை
நாமும்கூடிப் பாடுவோம்!!!

No comments:

Post a Comment