Sunday, June 4, 2017

கவிதை பிறந்ததே ...!!!


விண்ணி லுலவும் மேகங் கண்டு 
வண்ணப் பாவால் வனைந்திட நினைத்துப் 
பண்ணிய முயற்சியில் பலமுறை தோற்க 
எண்ணம் பலித்திட இறைவனை இறைஞ்சித் 
திண்ணிய நெஞ்சுடன் திரும்பவும் முயலப் 
பெண்ணென் எழுத்தில் பிழைக ளகன்று 
வெண்முகில் மனத்தில் விரியக் 
கண்குளிர் காட்சியாய்க் கவிதை பிறந்ததே! 

(நேரிசை ஆசிரியப்பா) 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment