Tuesday, June 27, 2017

இதயத்தை அள்ளிடுதே ....!!!!


இளங்காலைப் பொழுதினிலே 
     இனியவளாம் மதிமறைய 
களங்கமின்றிக் குளித்தெழும்பும் 
     கதிரவனின் ஒளியினிலே 
பளபளக்கும் நதியலையும் 
      பையவந்து கரைதழுவ 
உளமெங்கும் புத்துணர்வில் 
      உற்சாகம்  பெருகிடுதே   !

பொன்னொளிரும் மேகங்கள் 
      புதுப்பெண்ணாய் விண்ணுலவத் 
தென்னையிளங் கீற்றதுவும் 
      தென்றலிலே அசைந்தாடக் 
கன்னலெனக் குரலெழுப்பிக் 
     கருங்குயிலும் சுதிகூட்ட 
இன்பவெள்ளம் பொங்கிடுதே 
      இதயத்தை அள்ளிடுதே !
      

No comments:

Post a Comment