Sunday, June 4, 2017

கார்மேகங்களே ....!!!

ஆகாய ஓடையிலே ஆனந்தமாய் நீந்துகின்ற 
அற்புதக்கார் மேகங்களே வாங்க வாங்க! 
சாகாமல் காத்திடவே சாரல்மழை கொட்டச்செய்துத் 
தாகத்தைத் தீர்த்துவிட்டுப் போங்க போங்க !! 

ஏரிகுளம் வற்றிப்போச்சு ஏருழவன் வாழ்வும்போச்சு 
இந்நிலையை மாற்றிடவே வாராய் வாராய்! 
மாரிமனம் வச்சிடம்மா மன்னுயிர்கள் காத்திடம்மா 
மண்குளிர இக்கணமே தாராய் தாராய்! ! 

( இலாவணி) 
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment