Sunday, June 18, 2017

புன்னகை சிந்தும் !



கதிரு முதிக்க கமலம் விரிந்து களிப்பளிக்கும் 
மதியின் வரவில் மலர்ந்திடும் அல்லி மனங்கவரும் 
நதியின் கரைதனில் நாணல் வளைந்து நடனமிடும் 
பொதிகை மலைவளி புன்னகை சிந்தும் பொலிவுடனே !

கட்டளை கலித்துறை 

No comments:

Post a Comment