Wednesday, June 7, 2017

அழகாய்ப் பூத்திற்றே ....!!!


மலர்த்தோட்டம் வந்தவண்டு மனங்குளிர்ந்து பாட
****மதுவுண்ணு மாவலிலே மலர்மொட்டைத் தேட
புலர்காலைப் பொழுதினிலே புதுவசந்தம் வீசப்
***பொலிவுடனே இதழ்சிலிர்க்க பூவரும்பு மவிழ
உலராத பனித்துளியும் உவப்போடு நோக்க
***உள்ளத்தில் களிப்புடனே ஒயிலாக ஆட
அலங்காரக் கலையெழிலாய் ஆதவனும் தோன்ற
***அதைக்கண்ட மலர்வனமே அழகாய்ப்பூத் திற்றே!

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment