Monday, June 19, 2017

பரிவுடனே அருளே ...!!!

சிரம்மேலே கரங்கூப்பிச் சேவித்து நின்றேன் 
***செவ்வேளே! வேலென்று சிரித்தபடி வந்தாய் 
அரவணைப்பில் விழிகசிய அகங்குளிர்ந்து  நின்றேன் 
*** அலையுமுளம் அடங்கிடவே அருளாசி தந்தாய் 
இரவுபகல் மறவாமல் இசைந்துருகிப் பாட 
***இனியேனும் திருப்புகழை எந்நாவில் தாராய் 
பரமசிவ மைந்தனுன்றன் பதமலரைப் பற்ற 
***பரமபத வாழ்வுதனைப் பரிவுடனே அருளே !

No comments:

Post a Comment