Monday, June 12, 2017

அன்பே என்செய்வேன் ...???


கவிதைக்குள் நுட்பமுடன் காதல் சொல்லக்
***கன்னலெனக் கற்பனையும் கலந்தேன் நன்றாய்
குவிந்ததுவே கசக்கியதாள் குப்பை மேடாய்
***கொடுமையிதே யெனநினைத்துக் குழம்பி விட்டேன்!
தவித்தமனம் தள்ளாடச் சத்த மின்றிக்
***தனிமையிலே இமைக்கதவைச் சாத்தி விட்டேன்!
அவிழாத மொட்டதுவும் அழகாய்ப் பூக்க
***அன்பேயென் செய்வேன்நான் அறியேன் கண்ணே!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment