பட்டுடலை மூடிப் பருவமங்கை போலொளிரும்
வட்டநிலா வானில் வளையவரும் போதினிலே
தொட்டுவிடத் தான்துடிக்கும் சுற்றிவரும் மேகங்கள்
கட்டுக் குலைந்தவையும் காணாமற் போனதெங்கே
சுட்டனவோ விண்மீன்கள் சுண்டி யிழுத்தனவோ ?
சொட்டுந் துளிகள் சுகமாய் நனைத்தனவோ ?
வெட்டிய மின்னலால் வெட்கத்தில் ஓடினவோ ?
முட்டிமோதிப் பேரிடியாய் முத்தமிட்டுக் கொண்டனவே !
இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா
No comments:
Post a Comment