Tuesday, June 20, 2017

காதல் பிறந்தது ....!!!


கண்ணும் கண்ணும் கலந்த  போது
>>>காதல் பிறந்தது !
எண்ணம் முழுதும் அந்த நினைவே 
>>>இனிமை சேர்த்தது !
வண்ண கனவு  நாண மின்றி 
>>>வளைய வந்தது !
நண்பன் கூட தொல்லை யாக 
>>>நாளும் தெரிந்தது !

இணையைக் காண வில்லை யென்றால்
>>>இதயம் தவித்தது !
துணையைக் கண்ட பின்பு தானே 
>>>துடிப்பும் நின்றது !
அணைப்பில் தன்னை மறந்த உள்ளம் 
>>>அடங்க மறுத்தது !
பிணையைச் சேர்ந்த மானாய் மகிழ்ந்து 
>>>பெருமை கொண்டது !

மலர்ந்த பூவில் மதுவை உண்ணும் 
>>>வண்டாய்ப் பறந்தது !
கலந்த அன்பில் கனிந்தே உருகி 
>>>களித்துச் சிலிர்த்தது !
புலன்கள் ஐந்தும் அடங்க மறுத்தும் 
>>>புரிதல் தொடர்ந்தது !
சுலப தவணை முறையில் அச்சம் 
>>>துடைத்துப் போனது !

விழிகள் பேசும் காதல் கதையோ 
>>>வேகம் மிகுந்தது !
மொழிகள் மறந்த மௌனம் கூட 
>>>மோகங் கொண்டது !
வழியைத் தேடி இறையை வணங்க
>>>வரமும் கிடைத்தது !
பொழியும் மழையாய் நெஞ்சம் குளிர்ந்து 
>>>புனிதம் அடைந்தது .....!!!

சியாமளா ராஜசேகர் 

No comments:

Post a Comment