Wednesday, July 22, 2015

மெய்யனே கண் திறப்பாயே !

பாற்கடல் வாசனின் பாதம் 
***பற்றிடப் பாவமும் தீரும் !
மாற்றிடும் வல்வினை யாவும் 
***மாலவன் மந்திர நாமம் !
போற்றியே பாடிட வேண்டும் 
***பொன்னடி சேர்ந்திட வேண்டும் !
கூற்றுவன் வந்திடு முன்னர் 
***கும்பிடு வாய்மட நெஞ்சே !

சாற்றிய மாலையும் தோளில் 
***சௌமிய மாய்மணம் வீசும் !
ஏற்றிய சோதியின் முன்னர் 
****ஏங்கியே கூப்பிட வாராய் !
தேற்றிட யாருமே யின்றி 
***தேம்பிடும் பிள்ளையைப் பாராய் !
வேற்றுமைப் பார்த்திட லாமோ 
***மெய்யனே கண்திறப் பாயே ...!!

No comments:

Post a Comment