மன்னிப்பை வேண்டும் கண்ணியப் பெருநாள்
****மகிமைபல நிறைந்த ரமழான் திருநாள்
துன்பங்கள் விடுதலைப் பெற்றிடும் நன்னாள்
****சுவர்க்கத்தின் வாசல் திறந்திடும் பொன்னாள்...!!
உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோற்கும்
****உள்ளத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் திருநாள்
எண்ணத்தில் திருமறை எப்போதும் நிறையும்
****ஏற்றமிகு நன்னாளே ரமலான் திருநாள்...!!
புலனைந்தை அடக்கும் புனித நோன்பாம்
****புண்ணியங்கள் யாவும் பெருகிடும் நோன்பாம்
உலகெங்கும் வாழும் இசுலாம் மக்கள்
****உன்னதமாய் நோற்கும் உயரிய நோன்பாம்...!!
இறையச்சம் கொண்டே நிறைவுறச் செய்திடும்
***இல்லார்க்கு இயன்றதை அன்புடன் வழங்கிடும்
குறைவில்லா நன்மைகள் குவித்துக் கொடுத்திடும்
***குவலயம் போற்றிடும் ஈகைத் திருநாள்...!!
No comments:
Post a Comment