Saturday, July 25, 2015

குள்ள வாத்து நீந்தும் ....!!



குளத்தில் மலர்ந்த அல்லி யருகே 
***குள்ள வாத்து நீந்தும் ! 
பிளந்த அலகில் இரையைப் பற்றி 
***பிள்ளை கட்கு ஊட்டும் ! 
வளர்ந்த மரத்தின் பூக்கள் கொட்டி 
***வண்ண மெத்தை போடும் ! 
களங்க மில்லா ஆட்டுக் குட்டி 
***கண்ணை மூடித் தூங்கும் !

No comments:

Post a Comment