Tuesday, July 14, 2015

சித்தினியே புத்தொளிரும் சித்திரமே ....!!




அன்றலர்ந்த மென்மலராய் அன்னமவள் புன்னகையால் 
மின்னலிடை பொன்னெழிலாள் வென்றனளே - அன்புடையாள் 
கன்னலென இன்சுவையாள் கன்னியிடம், என்மனதை 
தென்றலதும் சொன்னதுவோ சென்று. 

முத்தமிழில் வித்தகியே முத்தழகே உத்தமியே 
சித்தினியே புத்தொளிரும் சித்திரமே- தித்திக்க 
நித்திரையில் சத்தமின்றி நித்தமுமே முத்தமிட்ட 
மித்திரைநீ பித்தாக்கும் வித்து .

No comments:

Post a Comment