Monday, July 27, 2015

நீ பொழிவாயென ....!!




நடுநிசியில் 
சுழன்றடித்துக் 
கொட்டித் தீர்த்தது மழை ! 

கதவை இழுத்து மூடி 
கட்டிலில் முடங்காமல் 
சாளரம் திறந்து 
சாரலில் குளிர்ந்து 
சத்தமுடன் 
சிந்தும் பெயலை ரசித்தேன் ...! 

அவ்வப்போது 
வெட்டிச் சென்ற மின்னலும் 
செவிப்பறையை 
அதிரச்செய்த இடியும் 
அச்சமூட்டினாலும் ..... 

அழகே உன்னை 
ஆராதிப்பேன் ! 
வானமுதே 
காத்திருப்பேன் என்றென்றும் 
நீ பொழிவாயென ....!!

No comments:

Post a Comment