Thursday, July 23, 2015

மங்கை எண்ணிப் பூத்தாள் ....!!


காலை நேரத் தென்றல் 
***கன்னம் கிள்ளிச் செல்ல 
சோலைப் பூக்கள் வாசம் 
***சோர்வு நீக்கும் மெல்ல 
மேலை வானில் மேகம் 
***வேக மாகப் போக 
சாலை யோரப் பூங்கா 
***சாந்தப் பார்வை பார்க்க 

கோலைத் தட்ட மந்தி
***குட்டிக் கர்ணம் போட 
ஓலைக் கீற்றில் கிள்ளை
***ஓசை யின்றி ஆட 
ஆலைக் கன்னல் சாறாய்
***அன்னம் கொஞ்சிப் பேச 
மாலை சூடும் நாளை 
***மங்கை எண்ணிப் பூத்தாள் !!

No comments:

Post a Comment