Sunday, July 26, 2015

முகில் தாண்டிச் சென்றாள் ....!!!

அக்கினியில் பூத்து அணங்கவளும் வந்தாள் 
சக்தியவள் காலில் சலங்கையுடன் நின்றாள் 
விக்கினங்கள் தீர்க்க விளக்கேந்தி வந்தாள் 
முக்திபதம் பெற்றே முகில்தாண்டிச் சென்றாளே ..!! 

துதிபாடி வந்தாள் துடிப்புடனே வந்தாள் 
முதிராத தோகை முடிவிரித்து வந்தாள் 
மதிபோலும் மங்கை வளைகுலுங்க வந்தாள் 
விதிதன்னை மாற்றி விதிர்விதிர்த்துச் சென்றாளே ...!!

No comments:

Post a Comment