மலையில் சிந்தும் அருவி ...!!
மயக்கி மனத்தை மகிழச் செய்யும்
***மலையில் சிந்தும் அருவி !
தயக்க மின்றி தண்ணீர் கொட்ட
***தலையில் முட்டித் தெறிக்கும் !
வியக்க வைத்து விழுந்துப் புரண்டு
***விரைந்துப் பாயும் நதியாய் !
இயற்கை யழகில் இதயம் ஒன்றி
***இன்பக் கவிதைப் படைக்கும் ...!!
No comments:
Post a Comment