Friday, July 24, 2015

மலையில் சிந்தும் அருவி ...!!



மயக்கி மனத்தை மகிழச் செய்யும் 
***மலையில் சிந்தும் அருவி !
தயக்க மின்றி தண்ணீர் கொட்ட 
***தலையில் முட்டித் தெறிக்கும் ! 
வியக்க வைத்து விழுந்துப் புரண்டு 
***விரைந்துப் பாயும் நதியாய் !
இயற்கை யழகில் இதயம் ஒன்றி 
***இன்பக் கவிதைப் படைக்கும் ...!!

No comments:

Post a Comment