Monday, July 20, 2015

பூத்தது வைகறை வானம் ....!!



பொன்னெழில் பொங்கிடும் காலை 
***பூங்குயில் மீட்டிடும் ராகம் ! 
தென்னையில் பைங்கிளி கத்தும் 
***தேன்குரல் கொண்டது பேசும் !
சென்னியில் கொண்டையுங் கொண்ட 
***சேவலுங் கூவிடும் வேளை !
கொன்றையின் செந்நிறப் பூக்கள் 
***கொட்டியேப்  பாதையை மூடும் !

அன்னமும் தன்னிணை யோடு 
***அன்புடன் நீரினில் நீந்தும் !
தென்றலும் மெல்லென வீச 
***தேகமும் சில்லெனக் கூச 
கன்னலின் இன்சுவை வெல்லும் 
***கன்னியின் பாட்டினில் உள்ளம் !
புன்னகை சிந்திடும் கோலம் 
***பூத்தது வைகறை வானம் !

1 comment:

  1. அருமை...! கவிதையில் கதிரவன் மெதுவாய் துயிலுரிய, வைகறை விழிதிறந்து நோக்குதல் ஆனந்தமாய் அகக்கண்களில் :)

    ReplyDelete