Wednesday, October 28, 2015

தயவுடன் திருந்திடச் செய்வாய் !! ( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )



முப்புர மெரித்த சங்கரன் மகனே 
***முன்னவ நின்னடிப் பணிந்தேன் !
தப்பெது செயினும் தடுத்திட வருவாய்
***தயவுடன் திருந்திடச் செய்வாய் !
அப்பமும் வடையும் அவலொடு கடலை
***அன்புடன் படைத்திட மகிழ்வாய் !
ஒப்புமை யில்லா உச்சிதத் தேவே
***ஒற்றுமை ஓங்கிட வருளே !

No comments:

Post a Comment