Saturday, October 24, 2015

காதல் பாக்கள் வடிக்குது ....!!!



பட்டுக் கன்னம் தொட்டுத் தீண்டப் 
***பாச நெஞ்சம் துடிக்குது ! 
கட்டிப் போட்ட கையி னாலே 
***காதல் பாக்கள் வடிக்குது ! 
எட்டி நின்று பார்க்கும் கண்ணில் 
***ஏக்கம் மட்டும் தெரியுது ! 
விட்டுச் செல்ல வுள்ள மின்றி 
***வீட்டுக் குள்ளே மறையுதே !! 

(எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
( தேமா தேமா தேமா தேமா 
தேமா தேமா விளம் )

No comments:

Post a Comment