Tuesday, October 13, 2015

துடித்திடும் இதயம் பூத்திடுமோ ?

கவலை வாட்டி வதைக்கும் போது 
***கனவிலும் களிப்பு வந்திடுமோ ? 
துவளும் நெஞ்சம் துணிவை யிழக்க 
***துடித்திடும் இதயம் பூத்திடுமோ ? 
அவலங் கண்டும் அமைதி காக்கும் 
***அடக்கமும் பேரைத் தந்திடுமோ ? 
உவகை பொங்கும் நாளை எண்ணி 
***உறுதியாய் உள்ளம் காத்திடுமோ ??

No comments:

Post a Comment