Thursday, October 15, 2015

மெல்லச் சென்று மறைந்ததே ....!!!



கொட்டுச் சத்தம் வானில் கேட்டுக் 
***கோலத் திங்கள் பயந்ததோ ?
எட்டிப் பார்த்து மின்னல் பூக்க 
***ஏத்திச் செவ்வாய் மலர்ந்ததோ ?
சொட்டு மாரி போட்ட தாலே 
***சொக்கி மேனி சிலிர்த்ததோ ?
விட்ட பின்னர் மீண்டும் தோன்ற 
***மெல்லச் சென்று மறைந்ததே ....!!!

     ( ஏழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

No comments:

Post a Comment