Saturday, October 24, 2015

வாழ்வும் சொர்க்க மாயிற்றே ....!!!



காஞ்சிப் பட்டுச் சேலை கட்டிக்  
***காதல் பார்வைப் பார்த்தாளே !
ஊஞ்ச லாடும் உள்ளந் தன்னை 
***ஊற்றாய்ப் பொங்க வைத்தாளே !
தீஞ்சொல் லாலே யீர்த்தா ளென்னை 
***தேனும் தோற்றுப் போயிற்றே !
வாஞ்சை யோடு கட்டிக் கொள்ள 
***வாழ்வும் சொர்க்க மாயிற்றே !

     ( எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

No comments:

Post a Comment