Tuesday, October 13, 2015

காதலில் விழுந்த பின்னே ...!!

கண்களும் கதைகள் பேசும் 
***காதலில் விழுந்த பின்னே ! 
உண்பதும் மறந்தேப் போகும் 
***உள்ளமும் மிதக்கும் தன்னால் ! 
எண்ணிலாக் கனவு வந்தே 
***இன்பயாழ் மீட்டிச் செல்லும் ! 
வண்ணமாய் யாவும் தோன்றும் 
***வசந்தமாய்ச் சிறக்கும் வாழ்வே ! 


( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
(விளம் + மா + தேமா )

No comments:

Post a Comment