Tuesday, October 13, 2015

ஒளிரும் தமிழே ....!!!

செந்தமிழ்ப் பாட்டு கேட்டால் 
***செவியொடு குளிரு முள்ளம் ! 
சிந்தையில் மகிழ்ச்சி வெள்ளம் 
***செம்மையாய்ப் பொங்கிப் பாயும் ! 
சந்தமும் கொஞ்சிக் கூட 
***சந்தன மணமும் தோற்கும் ! 
சுந்தரத் தமிழே என்றும் 
***சொக்கிட வைக்கும் தேனே ! 

( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ) 
( விளம் + மா + தேமா )

No comments:

Post a Comment